Tuesday, May 26, 2015
Sunday, May 17, 2015
மே-17 தோழர். ஜெகன் பிறந்த தினம்
அன்பு கொண்ட நெஞ்சினான்.
ஆற்றல் மிக்க அறிவினான்..
இனிமை கொண்ட நாவினான்..
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்..
உறுதி கொண்ட கொள்கையினான்..
ஊக்கம் மிக்க மதியினான்..
எளிமை கண்டு இரங்குவான்..
ஏறு போல் நடையினான்..
ஐயம் போக்கும் தெளிவினான்..
ஒற்றுமை சொல்லும் வழியினான்..
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...
ஜெகன் நாமம் போற்றுவோம்.....
NFTE இளைஞர் தினம்
Tuesday, May 12, 2015
உலக செவிலியர் தினம் – மே 12
புனிதமான
தொழில்களில் முதன்மையானது செவிலியர் பணி. அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு
கவனிப்பு, காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போடுதல், ஸ்பாஞ்ச் வைத்துக்
குளிப்பாட்டுதல் உட்பட பல வேலைகளை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர்கள்தான்
செவிலியர்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான பாராட்டுக்கள் கிடைப்பதில்லை.
நோயாளியைக்
கவனிப்பதுடன் நோயாளியின் உறவினர்கள்,
விசிட்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சக ஊழியர்களையும் செவிலியர்கள்
சமாளிக்க வேண்டியுள்ளது.
இன்றைய
நவீன செவிலியப் பணியின் தாய் எனக் கருதப்படும் ”பிளாரன்ஸ் நைட்டிங்கேல்” அவர்களின்
பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில்
பொது மருத்துவமனைகளில் 60 பேருக்கு ஒரு செவிலியர் இருக்கிறார். அதனால் அவர்கள் கூடுதல்
நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
இத்தகைய
சிறந்த சேவை புரியும் செவிலியர்களை நாமும் வாழ்த்திடுவோம்!
Tuesday, May 5, 2015
மதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும் அனைத்துக் கிளைகளிலும் மேதினக் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மதுரை GM அலுவலகக் கிளையில் கிளையின் தலைவர் தோழர்.T.நெடுஞ்செழியன் தலைமையேற்க,கிளைச் செயலர் தோழர். A.மெஹ்ராஜுதீன் வரவேற்க,தோழர். சுல்தான் அலாவுதீன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர். K.ஜெயப்பிரகாஷ் நமது சம்மேளனக் கொடியை ஏற்றிவைத்தார்.
மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், தோழியர் மதினா யாஸ்மின், தோழர். முருகேசன் ஆகியோர் மேதின வரலாறு, நடந்து முடிந்த போராட்ட அனுபவம், நமது எதிர்காலக் கடமைகள் பற்றி உரையாற்றினர்.
Subscribe to:
Posts (Atom)