Tuesday, October 20, 2015
Monday, October 5, 2015
ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA - விலைவாசிப்படி உயர்வு
தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA (VARIABLE DEARNESS ALLOWANCE) விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது.
=============================================
பிரிவு A நகரம் B நகரம் C நகரம்
=============================================
UNSKILLED 353 294 236
WATCH AND WARD 390 333 276
WITHOUT ARMS
WATCH AND WARD 430 390 333
WITH ARMS
=============================================
C பிரிவு நகரில் ஒரு நாள் ஊதியம் ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆகவும்
B பிரிவு நகரில் ஒரு நாள் ஊதியம் ரூ.290/=ல் இருந்து ரூ.294/= ஆகவும் உயர்ந்துள்ளது.
Wednesday, September 30, 2015
வெற்றி வாகை
சூடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
================================================
29/09/2015 அன்று
நடைபெற்ற புதுவை மாவட்ட மாநாட்டில்
புதிய
நிர்வாகிகள் தேர்வில் கருத்தொற்றுமை
ஏற்படாத
காரணத்தால் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்”
எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க செயல்பட்டு வரும் தோழர்.P.காமராஜ்
அவர்களின் தலைமை ஏற்று தேர்தலில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது
வாழ்த்துக்கள்.
மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி
மாவட்டச்செயலர் : தோழர்.செல்வரங்கன்
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ்
மாவட்டச்செயலர் : தோழர்.செல்வரங்கன்
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ்
ஆகியோர் தலைமையிலான புதிய நிர்வாகிகள்
சிறப்புடன் செயல்பட நமது வாழ்த்துக்கள்.
”துணைநலம்
ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.
Thursday, September 3, 2015
Tuesday, September 1, 2015
AITUC
CITU - INTUC
BMS - HMS - SEWA -LPF
AIUTUC -TUCC - AICCTU - UTUC
===============================
11 மத்திய சங்கங்களின்
12 அம்சக் கோரிக்கைகள்
=================================
மத்திய அரசே...
- குறைந்தபட்சக்கூலி மாதம் ரூ.15000/= வழங்கு..
- குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு..
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
- வேலையில்லாக் கொடுமையை மட்டுப்படுத்து...
- பொதுத்துறை பங்கு விற்பனையைக் கைவிடு..
- நிரந்தரப்பணிகளில் குத்தகை ஊழியர் முறையை ரத்து செய்..
- போனஸ், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி உச்சவரம்பை உயர்த்து...
- அனைத்து தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்..
- நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை உறுதியாக அமுல்படுத்து... எவருக்கும் சட்ட விலக்கு அளிக்காதே..
- தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து..
- தொழிலாளர் நலச்சட்டங்களில் தொழிலாளருக்கு எதிரான மாற்றங்களைச் செய்யாதே..
- இரயில்வே... ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே..
=============================================
NFTE
BSNLEU - BTEU - FNTO
BSNLMS - SEWA BSNL -TEPU
NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA
=================================
BSNL நிறுவன
11 ஊழியர் சங்கங்களின்
10 அம்சக்கோரிக்கைகள்...
=================================
மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
- BSNLலில் தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
- செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
- BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
- BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு... MTNLநிறுவனத்தை இணைக்காதே..
- ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
- BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
- அலைக்கற்றைக்கட்டணம் ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
- அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
- இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
- BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...
மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும்
இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..
நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும்
FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும்
போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...
தோழர்களே...
ஆண்டுகள் 68 உருண்டோடியும்...
அல்லல் வாழ்வு அகன்றபாடில்லை...
நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை உருவாக்கலாம்...
நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
விதிகளைக் காக்கலாம்...
நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை மாற்றலாம்...
நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
நாட்டைக்காக்கலாம்...
நம்மையும் காக்கலாம்...
புதிய விதி சமைக்க...
புதிய தேசம் படைக்க..
புதிய களம் காண்போம் தோழர்களே...
29-08-2015 அன்று மாநிலத் தலைவர் தோழர். லட்சம் அவர்களுக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா காட்சிகள்.
Friday, August 28, 2015
31-08-2015 அன்று பணி ஓய்வு பெறும்
தோழர். M.லட்சம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நமது மதிப்பிற்குரிய மாநிலத்தலைவர் தோழர் M. லட்சம் அவர்கள் வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு....
மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை
பட்டப்படிப்பை முடித்து முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்
கொண்டிருக்கும்போது அவரது மூத்த சகோதரரின் முயற்சியால் சென்னை ITC கம்பெனியில் எழுத்தர் பணி
கிடைத்ததும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணியில் சேர்ந்தார்.
சுமார் 3 ஆண்டுகளுக்குப்பின் 1983 ஜனவரி’18-ல் தபால்
தந்தி துறையில் அன்றைய தமிழ்நாடு வட்டம், செங்கல்பட்டு
மாவட்டத்தில் மதுராந்தகம் தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியில்
சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்க பணியில் தன்னை இணைத்துக்
கொண்டவர். கிளைச் செயலராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தோழர். காமராஜ்
மீதான தாக்குதல், தோழர்கள் NK,SSK மீதான காவல்துறையில் பொய் புகார், காஞ்சி
கோட்டச் செயலர் சங்கரன் மீதான காவல்துறை பிரச்னைகளை வென்றெடுக்க முன்நின்றவர்.
அதன்பின்பு மதுரை தொலைதொடர்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு
அருகிலுள்ள கம்பத்திற்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் கம்பம்
கிளைச் செயலர், தொடர்ந்து மாவட்டச் சங்க
நிர்வாகி, LJCM உறுப்பினர் என பல்வேறு
பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். 2005ல் கோவையில் நடந்த தமிழ் மாநில
மாநாட்டில் மாநிலச் சங்கத்தில் அமைப்புச் செயலராக பொறுப்பேற்று இன்று NFTE என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக மாண்போடு செயலாற்றி
வருகிறார். அவரது செயல்பாட்டில் என்றைக்குமே ஊனம் தடையாக இருந்ததில்லை.
இலாகாவில் டெலிபோன் ஆபரேட்டர், DE அலுவலக எழுத்தர், இன்றுவரை டெலிபோன் பில் கவுண்டர் கிளார்க் என எந்தப்
பணியென்றாலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.
தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல அவரது சொந்த ஊரான கே.கே.பட்டியில் நகர் நலக்கமிட்டியின்
செயலாளராகவும் சமுதாயக் கமிட்டியின் செயலாளராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு பிரச்னைகளுக்கு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமான, சுமூகமான தீர்வை சொல்பவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. திராவிட
கொள்கைகளில் அழுத்தமான பார்வை கொண்டவர்.
தி.மு.கவின் தீவிரமான தொண்டர் என்றபோதிலும்
மற்ற கட்சியினரிடமும் கனிவாக பழகக் கூடியவர். தனது கட்சி சார்பாக தனி தொழிற்சங்கம்
துவக்கப்பட்டபோதிலும் தனது இறுதிநாள்வரை NFTE இயக்கத்தில் தான்
பணியாற்றுவேன் என தனது கட்சித் தலைவர்களிடம் ஆணித்தரமாக கூறியவர். அத்தகைய மனிதநேயமிக்க மாநிலத் தலைவர்
தோழர். லட்சம் வரும் 31.08.2015 அன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
அவரது தொழிற்சங்க செயல்பாட்டிற்கும் பொதுச் சேவைக்கும் உறுதுணையாக
நின்றவர்கள் அவரது மனைவியும் 2குழந்தைகளும். மூத்த பெண் சூர்யாவிற்கு திருமணம்
முடிந்து விட்டது. அவரது கணவர் சந்திரசேகர் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி
வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது இளைய மகன் ரவிவர்மா டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு
உரக்கடை நடத்தி வருகிறார்.
அவரது தொழிற்சங்க பணியும் பொதுச் சேவையும் தொடர வாழ்த்துக்கள்.....
Tuesday, August 25, 2015
TTA இலாகா
போட்டித்தேர்வு முடிவுகள்
07/06/2015 அன்று நடைபெற்ற TTA
இலாக்கா போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 439
காலியிடங்களுக்கு 74
தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். இரண்டு தோழர்களின்
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள கீழ்க்கண்ட
தோழர்களை வாழ்த்துகின்றோம்.
P.நாகநாதன்@ நாகு, TM,99400657,போடிநாயக்கனூர்
Pநாராயணன் TM, 99600155,ஒட்டன்சத்திரம்
R.துரைமாரியப்பா,TM,20000226,ஆண்டிபட்டி
T.ராஜேந்திரன்,TM,99500534,சின்னாளபட்டி
R.சேகர்,TM,99415435,சின்னமனூர்.
Subscribe to:
Posts (Atom)