Friday, September 27, 2013

தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா 
மதுரை தல்லாகுளம் CSC அருகில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சீர்படுத்த வேண்டுமென மாவட்ட மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
நிர்வாகத்திலிருந்து செய்வதைவிட மதுரை நகரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு இப்பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 
GM அவர்கள் நன்கொடை தந்து துவக்கிவைக்க ஊழியர்கள்/அதிகாரிகள் நன்கொடையினை அள்ளித்தந்தனர்.
21-09-2013 அன்று GM அவர்கள் தலைமையில் CGM அவர்கள் புனரமைக்கப்பட்ட காந்தி சிலையை திறந்துவைத்தார்.   
 
 
 நன்கொடை தந்திட்ட அனைவருக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!

Wednesday, September 25, 2013

தோழர். K.ராஜேந்திரன்  மறைவுக்கு அஞ்சலி  

மதுரை GM அலுவலகக் கிளையின் தலைவரும் சென்னை சொசைட்டியின் RGB உறுப்பினருமான தோழர்.K.ராஜேந்திரன்(ஓய்வு) இன்று 25-09-2013 அதிகாலை 3.30 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அனைவரிடமும் அன்பாக பழகிய தோழர்.
மதுரை மாநில மாநாட்டிற்காக அல்லும் பகலும் தோழர். சேதுவுடன் இணைந்து பணியாற்றியவர்.

        

Thursday, September 19, 2013

தேசிய ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்க NFTE சார்பில் தரப்பட்ட குறிப்புகள்.....  இங்கே சொடுக்கவும்
செப்டம்பர் 19 தியாகிகள் தினம்

தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்!
அவர்கள் காட்டிய வழியில் போராடுவோம்!!
இழந்ததை மீட்போம்!!!

Wednesday, September 18, 2013

தோழர். தேவ பேரின்பன் மறைவுக்கு அஞ்சலி

தொலை தொடர்பு தோழர்களுக்கு மார்க்சியத்தையும் சமூக விஞ்ஞானத்தையும் பல தொழிற்சங்க வகுப்புகளில் கற்றுக்கொடுத்த, பல்வேறு நூல்களின் ஆசிரியரான  மார்க்சிய அறிஞர் தேவபேரின்பன் தர்மபுரியில் மறைந்துவிட்டார்.
நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்...

Wednesday, September 11, 2013

JCM  NATIONAL COUNCIL
தேசிய கூட்டாலோசனைக்குழு 
JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை 
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

NATIONAL COUNCIL உறுப்பினர்கள் 
NFTE BSNL 
1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM 
2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர் 
3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர் 


தோழர்கள் குப்தா, ஜெகன் காட்டிய வழியில்
ஊழியர்களின்/ நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய
சிந்தனையில் செயல்படும்
 நமது மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களை
 NATIONAL JCMல் உறுப்பினராக அறிவித்த மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில ஊழியர்கள் சார்பாக நன்றி.

ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில் 
தோழர். ஜெகன் வழியில் 
தமிழகப்பங்கை / பாங்கை உரிய முறையில் 
தோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.


ஊழியர் வாழ்வு மேம்பட BSNL தழைத்திட  
JCM தன் பங்கினைச்செலுத்தி செயல்பாட்டில் சிறந்திட நமது வாழ்த்துக்கள்.

Tuesday, September 10, 2013

செப்டம்பர் 11  பாரதி நினைவு நாள்


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? ”

Tuesday, September 3, 2013

தோழர். ரகமத்துல்லாவுக்கு அஞ்சலி

 தோழர். ஜெகன் E4 மாநிலச் செயலராய் இருந்த போது அவரோடு இணைந்து மாநிலப் பொருளாளராக பணியாற்றியவர். 

 விருதுநகர் மாவட்டத்தில் லைன்ஸ்டாப் மற்றும் மஸ்தூர் தோழர்களின் பாதுகாவலனாக பணியாற்றியவர். 

 தோழர்கள் சிவபெருமான், காளிமுத்து, அருணாசலம், சேது ஆகியோருடன் இணைந்து சங்கத்தை வளர்த்தெடுத்தவர். 

 1985ல் RTP,மஸ்தூர் நிரந்தரத்திற்காக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்.