Wednesday, August 29, 2012

வெற்றிகரமாக நடந்து முடிந்த மத்திய செயற்குழு:

நமது சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம் டெல்லியில் ஆகஸ்ட் 27,28 தேதிகளில் நடைபெற்றது.

மத்திய செயற்குழு நடைபெறும்வேளையில் 78.2% IDA இணைப்பிற்கான ஒப்புதலை BSNL Board வழங்கியதை செயற்குழு மகிழ்ச்சியோடு வரவேற்றது.

DOTயிடமிருந்து ஒப்புதலை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய சங்கம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

              உறுப்பினர் சந்தா ரூ.20/- என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல், புதிய அங்கீகார விதிகளை உருவாக்குதல், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்த பட்ச தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஊழியர் பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 27 அன்று CLCயுடன் நடைபெற்ற கூட்டத்தில் 13 சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. TEPU, BSNLMS ஆகிய இரு சங்கங்கள் மட்டுமே புதிய அங்கீகார விதிகளை உருவாக்க எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்த பட்ச உரிமைகளை உள்ளடக்கிய BSNLக்கென்று தனியாக அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை நடத்திட CLC உத்தரவிட்டதின் அடிப்படையில் BSNL நிர்வாகம் விரைவில் அக்கூட்டத்தை நடத்தவுள்ளது.

Tuesday, August 28, 2012

78.2% IDA இணைப்பிற்கு BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது.

NE12 ஊதிய விகிதம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2670  TTA பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுப்பு செய்ய ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சங்க அங்கீகார விதிகளை அனைத்துச் சங்கங்களின் ஒத்த கருத்தின் அடிப்படையில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை துவங்குமாறு BSNL நிர்வாகத்தை CLC கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கான கூட்டத்தை BSNL நிர்வாகம் விரைவில் நடத்தவுள்ளது

Monday, August 27, 2012

மத்திய செயற்குழு:
இன்றும் நாளையும் (27 & 28) டெல்லியில் மத்திய செயற்குழு நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்தில்
  • 12-06-12 78.2% IDA இணைப்பு பற்றிய உடன்பாடு & உடன்பாட்டை விரைவில் அமுல்படுத்துதல்
  • புதிய அங்கீகார விதிகளை உருவாக்குதல்
  • 6வது சங்க அங்கீகாரத் தேர்தல்
  • BSNL நிதி நிலைமை & மேம்படுத்துதல் 
ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.

           இன்று (27-08-2012) மதியம் 3 மணிக்கு எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNL நிர்வாகமும் அனைத்துச் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டத்தை CLC கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்கப்படும்.

Friday, August 24, 2012

1898 பதவிகளுக்கான JAO Part - II தேர்வு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

Thursday, August 23, 2012

TTA பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 3வது வாரத்தில் துவக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.
வரும் நிகழ்வுகள்
  • ஆகஸ்ட் 27,28 தேதிகளில் NFTE மத்திய செயற்குழு டெல்லியில் நடைபெற இருக்கிறது. 
  • ஆகஸ்ட் 27 அன்று டெல்லியில் எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNLல் புதிய அங்கீகார விதிகள் உருவாக்குதல் பற்றி விவாதிக்க BSNL நிர்வாகம், அனைத்துச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் சீப் லேபர் கமிஷனர் தலைமையில் நடைபெற உள்ளது.
  • ஆகஸ்ட் 28 BSNL போர்டு கூட்டம் நடைபெற உள்ளது.

Wednesday, August 22, 2012

ராஜ்ய சபாவில் VRS பற்றிய கேள்விக்கு இணை அமைச்சர் திரு.மிலிந் தியோரா அவர்கள் அளித்த பதில்:
  • BSNLலிடமிருந்து VRSக்கான குறிப்பு DOTக்கு வந்துள்ளது.
  • தகுதி: 45 வயதைக் கடந்த 15 ஆண்டுகள் சேவை புரிந்தவர்கள்
  • பணப்பயன்:  Ex-gratia சேவை முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 60நாட்கள் சம்பளம் (Basic+DA) அல்லது மீதமுள்ள சேவை மாதங்களுக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதிகபட்சமாக 60 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.
  • வழக்கமான ஓய்வூதியப் பலன்களுடன் ( கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம்) Ex-gratia ஒரு லட்சம் ஊழியர்களுக்கு ரூ.12371 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இத்துடன் வழக்கமான ஓய்வூதியப் பலன்கள் கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம் போன்றவற்றிற்கு கூடுதல் செலவு ஏற்படும்.
BSNLல் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றன.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்:

மத்திய அரசின் வங்கி சீர்திருத்த மசோதா, அவுட் சோர்சிங் முறை, தனியார்மயமாக்கல் ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஆகஸ்ட் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Monday, August 20, 2012

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

Saturday, August 18, 2012

TTA தேர்வு முடிவுகள்:

27-05-2012 அன்று நடைபெற்ற TTA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 30 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
3வது ஆண்டாக BSNL நட்டம்

2011-12ம் ஆண்டிற்கான வரவு செலவு  வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.8851கோடி நட்டம் என இணை அமைச்சர் மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.
மேலும் நட்டத்துக்கு காரணம் அதிகப்படியான ஊதியச் செலவு மற்றும் 3G ஸ்பெக்ட்ரத்திற்கு கட்டணம் செலுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான ஊதியச் செலவைக் குறைக்க 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களை VRS மூலம் குறைப்பதற்கான திட்டத்தை தயார்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Thursday, August 16, 2012

கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில், கூடுதலாக 14 வருமான வரி பிரிவை ஏற்படுத்த வெளியுறவு அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்படுவதை கண்காணிக்கவும், இந்திய தூதரக அலுவலகங்களில் வருமான வரி பிரிவு துவங்கப்பட வேண்டும் என, நிதி அமைச்சகம் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து, எந்தெந்த நாடுகளில் இந்த அலுவலகங்களை துவங்க வேண்டும் என்ற பட்டியலையும் சமர்ப்பித்திருந்தது.இதையடுத்து, சைப்ரஸ், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலந்து, அமெரிக்கா, மொரிஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், வருமான வரி பிரிவுகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கூடுதலாக, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் வருமான வரி பிரிவு அலுவலகங்களை துவங்கப்படவேண்டும் என, மத்திய நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.லோக்சபாவில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுபோன்ற அலுவலகங்களை வெளிநாடுகளில் துவங்குவதற்கு கணிசமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும் என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 14, 2012

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2012

வரவேற்புக்குழு வங்கிக் கணக்கை துவங்கியுள்ளது.
வங்கியின் பெயர்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா
கணக்கு எண்: 552502010006044
கிளை: நரிமேடு, மதுரை-2
பெயர்: The General secretary, Reception Committee, NFTE TN 4th Circle Conference

Tuesday, August 7, 2012

தகவல்:
                 NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி இன்று 07-08-2012 மாலை 5மணிக்கு தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ”வளர்ச்சிப் பாதையில் சர்வோதயம்-மார்க்சியம் ஒரு ஒப்பீடுஎன்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.